11ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம் மனிதச்சங்கிலி போராட்டத்தில் இணைந்தது

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இன்று (26/02/2022) யேர்மனி நாட்டில் லாண்டோ மாநகரில் நடைபெற்ற மனிதச் சங்கிலி கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொண்டது.

சிறிலங்காப் பேரினவாத அரசினால் தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே நிரந்தர தீர்வு என முக்கிய அரசியல் மையங்களில் முழங்கிய மனித நேய செயற்பாட்டாளர்களை யேர்மனிய நாட்டு கிளைப்பொறுப்பாளர் வரவேற்றார். மேலும் வாழிட மொழியிலும் தமிழிலுமாக உரைகள் நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை (27/02/2022) கால்சூர், யேர்மனி எனும் மாநகரத்தில் நடைபெற இருக்கும் மக்கள் சந்திப்பிலும் கலந்து கொண்டு பிரான்சு நாட்டினை அண்மிக்கின்றது. “

ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போராட்டமாகக் தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது” – தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

உங்கள் கவனத்திற்கு