அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு-2024 இத்தாலி

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2024 சனிக்கிழமை (01.06.2024 ) இத்தாலி தமிழ்க் கல்விச் சேவையின் 10 திலீபன் தமிழ்ச்சோலைகளில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது.

இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 220 வரையிலான மாணவர்கள் பங்குபற்றினர். தாய்மொழியைக் கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவச் செல்வங்களை வாழ்த்துவதுடன் அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் ஆசிரியர்களையும், பெற்றோரையும் போற்றுகிறோம்.
இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவை தனது நன்றியைத் தெரிவிக்கிறது.

GENOVA

BIELLA

MANTOVA

REGGIO

BOLOGNA

ROMA

NAPOLI

PALERMO

உங்கள் கவனத்திற்கு