Rilancio ஆணையின் சலுகைகளுக்கு எப்போது விண்ணப்பிப்பது

Rilancio ஆணை மே 19 அன்று இத்தாலியின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் (gazzetta ufficiale) வெளியிடப்பட்டது. இத்தாலியர்களுக்கு ஆதரவாக பல வகையான சலுகைகளைக் கொண்டுவருகிறது. எவ்வாறாயினும், உடனடியாக அவற்றைக் கோருவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் பொருந்தாது.

600 யூரோக்கள் சலுகை

professionisti, co.co.co பணிஒப்பந்தம் , கைவினைஞர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த பருவகால தொழிலாளர்கள், கலைத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கும் ஏப்ரல் மாதத்தில் இந்த 600 யூரோக்கள் உறுதிப்படுத்தப்படுகிறது. மார்ச் மாதத்தில் அதைப் பெற்றவர்களுக்கும் இது மே 20 முதல் 2-3 நாட்களுக்குள் தானாகவே செலுத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளிக்கிறது .

மேலும், மார்ச் மாதத்திற்கான இழப்பீட்டுக்கான கோரிக்கையை முன்வைக்காதவர்களுக்கு, இந்த ஆணை நடைமுறைக்கு வந்த 15 நாட்களுக்குள் (ஜூன் 3 க்குள்) Inps வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படலாம்.

1000 யூரோக்கள் சலுகை

மே மாதத்தில் Bonus 1000 யூரோக்களாக உயர்கிறது, ஆனால் சில நிபந்தனைகளின் கீழ் நீங்கள் இதனை பெற்றுக்கொள்ளலாம்:

  • Rilancio ஆணை நடைமுறைக்கு வந்த திகதியில் (மே 19) பணியாளர்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நிறுத்தியிருக்க வேண்டும்;
  • மே 19 அன்று இன்னும் செயலில் உள்ள Partita Iva வைத்திருப்பவர்கள், 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டின் மார்ச்-ஏப்ரல் மாதங்களின் வருமானத்தில் குறைந்தது 33% சதவிகிதம் குறைந்திருக்க வேண்டும்.

அதற்கு பதிலாக, ஏப்ரல் 2019 க்குப் பிறகு தங்கள் தொழிலைத் தொடங்கியவர்களுக்கும், வருமான வீழ்ச்சியை நிரூபிக்க முடியாமல் இருப்பவர்களுக்கும் 1000 யூரோக்கள் சலுகையை வழங்குவது பற்றி Inps இனால் அறிவிப்பு வழங்கப்படும்.

பொருளாதார அமைச்சர் Gualtieri அறிவித்தபடி, விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் முன்வைக்கப்படலாம்.

வீட்டுப்பணி ஊழியர்கள் (colf), முதியோர் பராமரிப்பாளர்கள் (badanti) மற்றும் குழந்தை பராமரிப்பாளர் (baby sitter)

Rilancio ஆணையை அமுல்படுத்தியதன் மூலம், குறைந்தது மொத்தம் 10 வாராந்திர மணிநேரங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்தங்களை வைத்திருந்து மற்றும் முதலாளியுடன் வசிக்காத வீட்டுத் தொழிலாளர்கள், குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு 500 யூரோ இழப்பீடு வழங்கப்படவுள்ளது .

Inpsக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான வழிமுறை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளுடன் Inps இன் சுற்றறிக்கை வெளியிடப்படும்.

Inps கொடுப்பனவுகளை ஒரே தடவையில் செலுத்தும். வீட்டுப்பணி ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிந்திருந்தாலும், விடுமுறை காலம், ஊதியம் பெறாத விடுப்பு அல்லது கூடுதல் இடைநீக்கம் ஆகியவற்றால் பயனடைந்திருந்தாலும் இந்த கொடுப்பனவு அங்கீகரிக்கப்படும்.

கோரிக்கைகளை சமர்ப்பிற்கவும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கான செயல்பாட்டு முறைகள் மற்றொரு விதிமுறை கோப்பு மூலம் குறிப்பிடப்படும்.

குழந்தை பராமரிப்பாளர் சலுகை (bonus baby sitter)

மே 20 முதல், பொருளாதார அமைச்சர் Gualtieri உறுதி அளித்தபடி, குழந்தை பராமரிப்பாளருக்கான 1200 யூரோக்கள் சலுகைக்கு விண்ணப்பிக்க முடியும். இது ஜூன் 15 முதல் மீண்டும் திறக்கப்படும் கோடைகால மையங்களுக்கும் பணம் செலுத்த பயன்படுத்தலாம்.

அவசர வருமானம் (reddito di cittadinanza)

அவசர வருமானத்திற்கு (reddito di cittadinanza), 400 முதல் 800 யூரோக்கள் மானியத்திற்கான விண்ணப்பங்களை ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று Rilancio ஆணை நிறுவுகிறது.
விண்ணப்பம் Inpsக்கு அனுப்பப்பட வேண்டும். Inps வெளியிடும் படிவத்தைப் பயன்படுத்தி caf மற்றும் patronato நிறுவனங்கள் மூலமாகவும் சமர்பிக்கப்படலாம். இதிலும், Inps நிறுவனத்தின் அறிவுறுத்தல்களுடன் ஒரு சுற்றறிக்கை வெளியாகவுள்ளது.

மிதிவண்டிகள், மின்சார வண்டிகள் வாங்குவதற்கான சலுகை

“நிலையான” நகர்விற்கான ஊக்கத்தொகை அதிகபட்சமாக 500 யூரோக்களை எட்டுகிறது மற்றும் மிதிவண்டிகள், e-bike, monopattini elettrici வாங்குவதில் 60% சதவிகிதம் வரை உதவித் தொகை அடங்கும். சலுகையைப் பெற, நீங்கள் சுற்றுச்சூழல் அமைச்சின் வலைத்தளத்தின் பயன்பாட்டிற்காக காத்திருக்க வேண்டும் (Rilancio ஆணையை அமல்படுத்தியதிலிருந்து 60 நாட்களுக்குள் செயல்படும், எனவே ஜூலை நடுப்பகுதியில்). உந்துகள் வாங்கியதற்கான விலைப் பற்றுச்சீட்டு (fattura) வைத்திருக்க வேண்டும், மற்றும் மாற்றாக பணத்தைத் திரும்பப்பெற இணையவழி மூலம் பொருட்கள் வாங்குவதற்குரிய (shopping online) voucher மூலம் பெற்றுக்கொள்ளலாம் .

இந்த சலுகை மே 4 முதல் வாங்கிய உந்துகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட நகரங்கள் மற்றும் Metropolitanaக்களில் வசிப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Ecobonus 110%

கட்டிட மற்றும் எரிசக்தி சீரமைப்புக்கு சலுகைகளை கோருவதற்கும் நீண்ட நேர காலவரை வழங்கப்பட்டுள்ளது. Rilancio ஆணையில் வழங்கப்பட்ட புதிய 110% சதவிகிதம் வரி விலக்கு 2020 ஜூலை 1 முதல் 20 டிசம்பர் 2021 வரை ஆவணப்படுத்தப்பட்ட செலவுகளுக்கு பொருந்தும். இது உரிமையுள்ள தரப்பினர்களிடையே ஐந்து சம ஆண்டுத் தவணைகளாக பிரிக்கப்படும்.

உங்கள் கவனத்திற்கு