மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு – 2023

தேச விடுதலைக்காய் களமாடி தம் உயிரை ஈகம் செய்த வீரமறவர்களின் தியாகங்களை கௌரவித்து , மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு  இத்தாலி பலெர்மோ திலீபன் தமிழ்சோலையில் 18/11/2023 நடைபெற்றது.

அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்கள் விளக்கேற்றி மலர்தூவி மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

தொடர்ந்து தமிழீழத் தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக தம்முயிரைத் தற்கொடையாக்கி தமிழின மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் மாவீரப் புனிதர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள், மற்றும் உரித்துடையோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது .

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக அனைத்து மாவீரர் குடும்பங்களையும் மதிப்பளித்து, ஒவ்வொரு மாவீரர் பற்றிய நினைவுகளையும் மீண்டும் உயிர்ப்பித்து உறுதியெடுக்கும் உணர்வுபூர்வமான நிகழ்வாக  அமைந்திருந்தது.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

உங்கள் கவனத்திற்கு