Lecce வாழ் மக்களின் கவனத்திற்கு!

டிசம்பர் 9 புதன்கிழமை முதல், குடும்பத்தின் முதன்மைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏனைய பொருளாதார வளங்கள் இல்லாதவர்கள் (அதாவது 500 யூரோக்களுக்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட மாதாந்திர தொகையை வழங்கும் Reddito di cittadinanza, Naspi, Rem, Rei அல்லது பிற சமூக பாதுகாப்பு வலைகள் இல்லாதவர்கள்), அல்லது வருமான ஆதரவு நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து பயனடையாத குடும்பங்கள் மற்றும் Lecceயில் வசிக்கும் குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இதனைப் பெறுவதற்கு, தொற்றுநோயியல் அவசரநிலை காரணமாக பெருமளவில் வேலையிலிர்ந்து இடைநிறுத்தப்பட்டு சம்பளம் அல்லது எந்தவொரு வருமானமும் அற்றவர்களாக இருக்க வேண்டும்.

Piattaforma carta spesa எனும் தளத்தில் வெளியிடப்பட்ட படிவத்தை நிரப்ப வேண்டும். செல்லுபடியான தனிப்பட்ட அடையாள அட்டை மற்றும் வரிக் குறியீட்டின் (codice fiscale) நகலை எடுத்து அதில் கையொப்பத்தையிட்டு, pdf வடிவத்தில், இரண்டையும் இணையத்தில் இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். வருகையின் காலவரிசைப்படி விண்ணப்பங்கள் ஆராயப்படும். இச் சலுகையுடன் இணைக்கப்பட்ட கடைகளில், அடிப்படை தேவைப் பொருட்களை வாங்குவதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட வேண்டும். இது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒற்றையருக்கு 100 யூரோக்கள், குடும்பத்தில் இரண்டு பேருக்கு 150 யூரோக்கள், மூன்று பேருக்கு 200 யூரோக்கள், நான்கு பேருக்கு 250 யூரோக்கள், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில் 300 யூரோக்கள் வழங்கப்படும். 3 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும், 100 யூரோக்கள் அதிகரிக்கப்படும்.

படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும், வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு சரியான செருகல் குறித்து அறிவிக்கப்படும். Buono spesaவின் அளவு குறித்து குறிப்பிடப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்தல் தரப்படும்.

வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் உண்மைத்தன்மை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் நலன்புரித் துறையின் அலுவலகங்கள் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, ISEE சான்றிதழை வழங்கக் கோரும். தவறான அறிக்கைகளை வெளியிடும் எவரும் தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்புச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.

உங்கள் கவனத்திற்கு