நீங்கள் தனியாக இல்லை – உதவித் தகவல் மையம்

முதல் தடவையாக ஒரு இக்கட்டான நிலைமையில் வாழும் நாம், இது ஒரு தற்காலிக நிபந்தனை என்பதை நினைவில் கொண்டும், இத்தாலி அரசாங்கம் விடுத்திருக்கும் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே (எங்கள் வலைத்தளத்திலும் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது) இதிலிருந்து விரைவில் மீண்டுவர முடியும் என்பதும் நினைவில் கொள்வது முக்கியம்.

இவ் அவசரக்கால நிலைமையால் நாம் குழப்பங்களுக்குள் உள்ளாகலாம், அதனால் எம்மை கேட்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் அறிவுறுத்தக்கூடிய ஒருவருடன் நம் மனநிலையைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகலாம்.
இதற்காகவும் தான் நாங்கள் உங்களுக்காக பணியாற்றி வருகின்றோம். எங்கள் வலைத்தளங்களில் நாங்கள் குறிப்பிட்டிருக்கும் தொலைபேசி எண்கள் ஊடாக எங்களை தொடர்புக் கொள்ள தயங்க வேண்டாம்!

கொரோனா வைரசு பரவுதலால் இத்தாலியில் விதிக்கப்பட்ட அவசரக்கால சட்டங்கள் சம்மந்தமாக கேள்விகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு எம்மை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளலாம்:

(10:00 – 13:00) – 0039 333 744 1711
(15:00 – 18:00) – 0039 327 755 0188 – 015779020
(18:00 – 21:00) – 0039 389 101 9911

உங்கள் கவனத்திற்கு