தமிழீழத் தேசிய மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப்போட்டி 2022 இத்தாலி மேற்பிராந்தியம்

இத்தாலி மேற்பிராந்திய ஈழத்தமிழர் விளையாட்டுத் துறையினால் 17-07-2022 அன்று தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் போட்டிகள், மற்றும் உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டப் போட்டிகள் என ரெச்சியோ எமிலியா மாநகரில் நடைபெற்றது.

நிகழ்வில் முதலாவதாக  பொதுச்சுடர் ஏற்றப்பட்டத்தைத் தொடர்ந்து இத்தாலி, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு விளையாட்டுத் துறையின் கொடி ஏற்றலை தொடர்ந்து கழகங்கள் தமது கொடிகளை ஏற்றினார். தொடர்ந்து ஈகைச்சுடர் அகவணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமானது. இச் சுற்றுப் போட்டியில் பொலோனியா, ரெச்சியோ எமிலியா, மாந்தோவா, பியல்லா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்று சிறப்பித்ததோடு உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டப் போட்டிகளில் கப்டன் மில்லர் விளையாட்டுக் கழகம், லெப்.கேணல் விக்டர் விளையாட்டுக் கழகம்,  ஸ்ரார் போய்ஸ் விளையாட்டுக் கழகம், தாய்மண் விளையாட்டுக் கழகம், அக்கினி விளையாட்டுக் கழகம், ஈழவன் விளையாட்டுக் கழகம், ரெச்சியோ ஸ்ரார் விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றின. போட்டிகள் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்று இறுதியில் மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்த வீளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து உதைபந்தாட்டம் கீழ்ப் பிரிவில் தாய் மண் – அ அணி முதல் இடத்தையும் தாய் மண் – ஆ அணி இரண்டாவது இடத்தையும் தமதாக்கி கொண்டது. மத்திய பிரிவில் தாய் மண் – அ, ஆ, இ அணிகள் முதலாவது இரண்டாவது மூன்றாவது என்று வெற்றிகளை தமதாக்கிக் கொண்டனர். தொடர்ந்து, மேற்பிரிவு உதைபந்தாட்ட அணிகள் கடும் போட்டிகளுக்கு மத்தியில்  முதலாம் இடத்தை அக்கினி விளையாட்டுக் கழகம் தமதாக்கி கொண்டது. இரண்டாம் இடத்தை கப்டன் மில்லர் விளையாட்டு கழகமும் மூன்றாம் இடத்தை ஸ்டார் விளையாட்டு கழகம் தமதாக்கிக் கொண்டன. அதேபோல் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாம் இடத்தை அக்கினி  விளையாட்டுக் கழகம் தமதாக்கி கொண்டது. தொடர்ந்து இரண்டாம் இடத்தை ஈழவன்-(ஆ) விளையாட்டுக் கழகமும் மூன்றாம் இடத்தை ஈழவன்-(அ) விளையாட்டுக் கழகமும் தமதாக்கிக் கொண்டன.

கொரோனா நூண்ணுயிர் தொற்றுக்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின் நடைபெற்ற இப் போட்டியில் எமது திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் ஆசிரியர்கள், மற்றும்  பெற்றோர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கு பற்றி சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இறுதியில் தமிழிழ தேசியக்கொடி கையேந்தல் செய்யப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க விடப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு