“நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்”-லெப். கேணல் இளங்கோ

22.10.2007 அன்று உலகமே வியந்து நின்ற வீர காவியத்தை படைத்தார்கள் எமது கரும்புலிகளும் வான்புலிகளும். தேசியத் தலைவரின் நுணுக்கமான திட்டமிடலில் உருவான “எல்லாளன் நடவடிக்கை”யின் போது சிறிலங்காவின் அனுராதபுர வான்படைத் தளத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா வான்படையினரின் வான்கலன்களை அழித்து அத் தளத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் சரித்திரம் படைத்த தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி லெப். கேணல் இளங்கோ அவர்கள் 09-10-2007 அன்று தமிழ் மக்கள் அனைவருக்காகவும் எழுதிய இறுதி மடலின் வரிகள் இங்கே.

என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.
தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும். எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் சொல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு.

வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர் தான் எங்கட அப்பா.
தலைவர் தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

இ.இளங்கோ.

உங்கள் கவனத்திற்கு