இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2023

தமிழீழப் போராட்ட வரலாற்றில் களத்தில் வீரகாவியமான முதற் பெண் போராளியான 2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளே தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக நினைவு கூரப்படுகின்றது .அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு (15/10/2023) ஞாயிற்றுக்கிழமை செனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் மகளிர் அணியினால் உணர்வுபூர்வமான ஒழுங்கமைப்பில் நினைவு கூரப்பட்டது. ஈகைச்சுடரை செனோவா மகளிர் அணியில் இருந்து திருமதி கேசவன் அகலியா ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர்வணக்கமும் இடம்பெற்றது. 2ம் லெப் மாலதி அவர்களின் தடம் பதித்த வாழ்க்கைப் பயணத்தின் சிறு தொகுப்பை திருமதி ஜெசிந்தன் கவிதா வழங்கிச் சென்றார். அதனைத் தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் பேச்சு,கவிதை ,பாடல்கள் இடம்பெற்றன. மாணவர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்கள் ,பொதுமக்கள் என குறிப்பிடத்தக்க மக்கள் 2ம் லெப் மாலதி அவர்களின் நினைவுகளைச் சுமந்து எழுச்சியுடன் நிகழ்வில் பங்கேற்றனர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

உங்கள் கவனத்திற்கு