இத்தாலி பியல்லா நகரில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு

அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு 31.05.2025 இத்தாலி பியல்லா நகரில் இடம் பெற்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில் அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்ட பத்தொன்பது மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு உணர் வெழுச்சியோடு இடம் பெற்றது.பொதுச் சுடருடன் இவ்வணக்க நிகழ்வு ஆரம்பமாகியது. தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்துஅனைத்து மாவீரர்களுக்கான திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம் , மலர் வணக்கம், சுடர் வணக்கம் இடம் பெற்றது. அனைத்து மாவீரர்களின் வீரவரலாறு தாங்கிய உரை இடம் பெற்றது . இறுதியாக தேசியக் கொடி கையேற்றலுடன் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு