தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- இத்தாலி மேற்பிராந்தியம்

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு, 13/12/2025 இன்றுபேரிடர்கால உதவியாக “உறவை வளர்ப்போம்”எனும் தொனிப்பொருளில் இத்தாலி மேற்பிராந்தியத்தில் வாழும் தாயக உறவுகளின் பேராதரவுடன் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவிப் பிரதேசத்தில் உள்ள தேறாங்கண்டல் மற்றும் மங்கை குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை, பிஸ்கற், மற்றும் பனடோல் ஆகியன அடங்கிய உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இவ் உதவியை வழங்கிய இத்தாலி மேற்பிராந்திய வாழ் தமிழ் உறவுகளுக்கு மல்லாவிப் பிரதேச மக்கள் தங்களது மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கவனத்திற்கு