Toscana மாநிலத்திலும் முக கவசம் அணிய வேண்டும்
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2020/04/download.jpeg)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2020/04/download.jpeg)
Toscana மாநிலத்திலும் முக கவசம் அணியும் கட்டளை மாநில ஆளுநர் Enrico Rossi இனால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ் உத்தரவு மாநிலத்தில் வாழும் மக்களுக்கு ஒவ்வொருவருக்கும் 3 முக கவசங்கள் வழங்கப்பட்ட பின்னர் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் Toscana மாநிலம் 10 மில்லியன் முகக்கவசங்களை பெற்றுக்கொண்டுள்ளது என்பதை மாநில ஆட்சி தெரிவித்துள்ளது. இந்த முகக்கவசங்களை நகராட்சிகளுக்கு அனுப்பப்பட்டவுடன் மக்களுக்கு வழங்கப்படும்.
“சமீப காலமாக மக்களின் முறையற்ற நடத்தைகள் மற்றும் அதிக கூட்ட நெரிசல்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இந்த காரணத்திற்காக வெளியே செல்லும் போது முக கவசம் பயன்படுத்துவதை கட்டாயமாக்கும் கட்டளையை பிறப்பிக்கவுள்ளேன். மற்றும் இந்த கட்டளை Toscana மாநிலத்திலுள்ள ஒவ்வொரு நகராட்சிகளும் (Comuni) மக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்ட பின்னர் நடைமுறைக்கு வரும்” என்று அவர் குறிப்பிட்டார்.