Bonus 600 யூரோ: திறக்கப்பட்ட முதல் நாளில் INPS இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது
“இத்தாலி மறுவாழ்வு” (Cura Italia) ஆணையின் கீழ் partita IVA, சுயதொழில் செய்வோர்க்கான 600 யூரோக்கள் வழங்கும் திட்டம் இன்று 1 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதிகமான கோரிக்கைகள் அனுப்பப்பட்ட படியால் இன்று காலையில் INPS இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. INPS நிறுவனத்தின் தலைவர் Pasquale Tridico இந்த பிரச்சினைக்கு பின்னால் hackers இன் தாக்குதல்கள் உள்ளன என்று கூறியுள்ளார். காலை 8 மணி அளவில் 300.000 மேலான படிவங்கள், வினாடிக்கு 300 படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திறக்கப்பட்ட நாளிலே இணையத்தளம் முடக்கப்பட்டதை எதிர்க்கட்சி தலைவர்கள் அரசாங்கத்தையை கடுமையாக விமர்சித்தார்கள்.
இனிவரும் நாட்களில் இணையத்தளம் படிப்படியாக திறக்கப்படும் என்பதை Tridico தெரிவித்துள்ளார். அதாவது காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை CAF மற்றும் Patronati நிறுவனங்களுக்கும், மாலை 4 மணிக்கு பின் தனிநபர்கள் இணையத்தளத்தை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2020/04/Screenshot-2020-04-01-at-14.29.35-1024x263.png)
![](https://www.tamilinfopoint.it/wp-content/uploads/2020/04/Screenshot-2020-04-01-at-14.29.35-1024x263.png)
இந்த 600 யூரோ சலுகை, 35 ஆயிரம் யூரோக்கள் வரை வரி இல்லாத வருமானத்தை கொண்டிருப்பவர் வழங்கப்படும்.
அல்லது 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் யூரோக்கள் வரை வருமானத்தை கொண்டுள்ளவர்கள் 2020 ஆம் ஆண்டில் முதல் 3 மாத வருமானத்தில் குறைந்தது 33% வீழ்ச்சியை சந்தித்ததாக நிரூபிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேவைகளின் அடிப்படையில் 600 யூரோக்கள் இருந்து 800 யூரோக்கள் வரை அதிகரிக்கப்படலாம் என்று பொருளாதார துணை அமைச்சர் Antonio Misiani “Radio Capital” காற்றலையில் அறிவித்துள்ளார்.